ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் போன்ற படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் பார்த்திபன். இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு புத்தகத்தை விரித்து வைத்து அதில் மயிலிறகு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இதற்குள் அடங்கியுள்ள டைட்டிலை கெஸ் பண்ணுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள் இருக்கும் திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடிங்கள் பார்க்கலாம். என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் பார்த்திபன்.
அதையடுத்து, புத்தகத்தின் 53ம் பக்கத்தில் மயிலிறகு இருப்பதால் , 53ஆம் பக்கம் என்று சிலர் கூறியிருப்பதோடு, புத்தகத்தில் ஒரு மயிலிறகு என்று பலரும் தங்களுக்கு தோன்றிய தலைப்புகளை யூகித்து பதிவு செய்துள்ளார்கள் . அதைத்தொடர்ந்து பார்த்திபன் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், என் தலைப்புக்கு பக்கம் பக்கமாய் மிகப் பக்கமாய் 51 ஆம் பக்கம், 52 ஆம் பக்கம், 53 ஆம் பக்கம் என நெருங்கிவிட்ட தலைப்புகள். ஆனால் கதைக்குள் பொருத்தி நான் நிறுத்திய தலைப்புடன் உங்களின் யூகம் பொருந்துகிறதா என்று பார்த்துவிட்டு நாளை எனதை அறிவிப்பேன். அதுவரை உங்களின் அறிவுத்திறனை ஆராதிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
அது மட்டுமின்றி என் தலைப்பை யூகிக்கும் ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருப்பதற்கு சிலர், புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கொள்ளவா முடியும் என்று கடுப்படித்திருந்தார்கள். அவர்களுக்கு பார்த்திபன், கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு, கட்டிக்கிட்டவர்களுக்கு கொடுங்க. இல்ல கட்டிக்க போறவங்களுக்கு குடுங்க என்று பதில் கொடுத்து இருக்கிறார்.