இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் கீரவாணி இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
படக்குழுவினர் தொடர்ந்து சில விருது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அப்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமவுலி, “மிகச் சிறந்தவரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் மனைவியையும் படம் பார்க்க பரிந்துரை செய்து மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சார், படத்தைப் பற்றி எங்களுடன் 10 நிமிடங்கள் அது குறித்து விவாதித்ததை மறக்க முடியாது. நீங்கள் சொன்னது போல நான் இந்த உலகத்தின் உச்சியில் நிற்கிறேன், உங்கள் இருவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.