ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலித்தது என யார் முதலில் அறிவிக்கப் போகிறார்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேற்று நடந்த 'வாரிசு' படக்குழுவின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கூட அது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் எதற்கு 100 கோடி என சொல்ல வேண்டும், நேரடியாக 150 கோடி வசூல் என அறிவித்தது 'வாரிசு' படக்குழு. 5 நாளில் இந்த வசூலை எட்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், 'துணிவு' படக்குழு இன்னும் 100 கோடி வசூலைக் கடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது. இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடியப்போகிறது.
'துணிவு' படமும் இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அதை ரசிகர்களும் கொண்டாட முடியும். இருப்பினும் 'ரியல் வின்னர்' என்று மட்டுமே அப்படக்குழுவினர் இன்னமும் குறிப்பிட்டு வருகிறார்கள். என்ன வசூல் என படக்குழுவினர் இன்றாவது அறிவிப்பார்களா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.