துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலித்தது என யார் முதலில் அறிவிக்கப் போகிறார்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேற்று நடந்த 'வாரிசு' படக்குழுவின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கூட அது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் எதற்கு 100 கோடி என சொல்ல வேண்டும், நேரடியாக 150 கோடி வசூல் என அறிவித்தது 'வாரிசு' படக்குழு. 5 நாளில் இந்த வசூலை எட்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், 'துணிவு' படக்குழு இன்னும் 100 கோடி வசூலைக் கடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது. இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடியப்போகிறது.
'துணிவு' படமும் இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அதை ரசிகர்களும் கொண்டாட முடியும். இருப்பினும் 'ரியல் வின்னர்' என்று மட்டுமே அப்படக்குழுவினர் இன்னமும் குறிப்பிட்டு வருகிறார்கள். என்ன வசூல் என படக்குழுவினர் இன்றாவது அறிவிப்பார்களா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.