100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா |
மேயாதமான் படம் மூலம் தமிழில் நாயகியாக களமிறங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தை பற்றி பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ரசிகர்கள் ஏற்பார்களா, இல்லையா என்று யோசிக்கவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து, நடித்தேன். சினிமா பின்னணி உள்ளவர்களே சினிமாவில் தங்களை நிரூபிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்களை பார்க்கும்போது நான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.