ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம் அறிவு, வீரம், தனியொருவன், குற்றம் 23, விழித்திரு உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் முதன் முறையாக 'குற்றம் புரிந்தால்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் டிஸ்னி கூறியதாவது: மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் சட்டத்தை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன். பழிவாங்கத் துடிக்கும் ஹீரோவை விரட்டும் போலீஸ் அதிகாரியாக அபிநயா நடிக்கிறார், என்கிறார்.