அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார்.
ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண நானும் ஆவலாக இருந்தேன். ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்றார்.