தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், விஜய் 67வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னைக் அப்படத்தில் நடிப்பதற்கு யாரும் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் 67வது படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரியவந்துள்ளது.