'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.