தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரவுடி பேபி, கார்டியன், அரண்மணை 4ம் பாகம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இகோர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு காந்தாரி படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த ஹன்சிகா ஒரே கட்டமாக படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் நேற்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணனும் உடன் சென்றார்.