திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் சரித்திர காலகட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம் வெற்றிமாறன். அதனால் அவர் இடைவெளி கொடுக்கும் அந்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டே மாதத்தில் கேப் விடாமல் நடித்து கொடுத்துவிட்டு அதையடுத்து மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.