இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசை ஆல்பங்களின் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்பிறகு சினிமா இசை அமைப்பாளர் ஆனார், தொடர்ச்சியாக நடிகர், இயக்குனர் என்று தன்னை வளர்த்துக் கொண்டார். அவரின் முதல் படம் 'மீசைய முறுக்கு' வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது வீரன், பி.டி.சார் படங்களில் நடித்து வருகிறார்.
ஆதியின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரின் தனி இசை ஆல்பங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது காதலர் தினமான இன்று 'பொய் பொய் பொய்' என்ற இசை ஆல்பத்தை காதலர் தின சிறப்பு ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் ஆதி அறிவித்துள்ளார்.