ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
சென்னை: சென்னையில் காமெடி நடிகர் 'ரோபோ' சங்கரின் வீட்டில், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர் 11வது தெருவில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. இவர், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தன் வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து, சமூக வலைதளத்தில், 'வீடியோ' பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேற்று சென்றனர்.
விசாரணையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.