தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை: சென்னையில் காமெடி நடிகர் 'ரோபோ' சங்கரின் வீட்டில், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர் 11வது தெருவில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. இவர், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தன் வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து, சமூக வலைதளத்தில், 'வீடியோ' பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேற்று சென்றனர்.
விசாரணையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.