தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மிர்ச்சி சிவா நடித்துள்ள ‛‛சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'' படம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய சிவா, ‛‛இந்த படத்தின் கதை புதுமையாகவும், எனக்கு ஏற்ற வகையிலும் இருந்ததால் நடித்தேன். லாஜிக்கிற்கு அப்பாற்பட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் பதில் அளித்தார். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விக்கு, ‛‛என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினி மட்டுமே. அதேப்போன்று அகில உலக சூப்பர் ஸ்டார் நான் தான்'' என்றவர். எனக்கு யு சான்று கிடைக்கும் படங்களே போதும். நமது ரசிகர்கள் எல்லாம் பேமிலி ஆடியன்ஸ். அதனால் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தம் வசனம் கொண்ட அடல்ட் மாதிரியான படங்களில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்றார்.
கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும், இவரும் ஒரேமாதிரியாக இருப்பது போன்று மீம்ஸ் வருகிறதே என்ற கேள்விக்கு, ‛‛அவரைப்போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. என்னைப் போல் அவரால் நடனம் ஆட முடியாது'' என காமெடியாக பதில் அளித்தார்.