'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தற்போது குணச்சித்திரனார் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. அந்தப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து புலிவால் என்கிற படத்தை இயக்கிய மாரிமுத்து இன்னொரு பக்கம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதை தொடர்ந்து தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தற்போது. தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் பல வில்லன்களில் இவரும் ஒருவராக நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனியும் இவரும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். ஆனால் சமுத்திரகனியை விட மாரிமுத்து சற்று வயதானவராக தெரிவதால் அவரை அண்ணனாகவும் சமுத்திரக்கனியை தம்பியாகவும் மாற்றிய ஷங்கர், அதேபோல நல்லவனாக இருந்த அண்ணன் கதாபாத்திரத்தையும் வில்லனாக மாற்றி தம்பியை நல்லவனாக மாற்றி விட்டாராம். இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மாரிமுத்துவே கூறியுள்ளார்.