இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.
இதற்கிடையே ரஜினியின் 170வது படத்தை ஞானவேல் இயக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 2024ல் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த சில தகவல் கசிந்துள்ளது.
அதாவது ரஜினி 170 வது படமும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை போன்று ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி, தூக்கு தண்டனைக்கு எதிராக போராடுபவராக நடிக்கிறாராம். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.