ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா , பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் என பலர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பி நிலையில், விஜய் மற்றும் திரிஷாவும் ஒரு சிறிய பிரேக்கிற்காக சென்னை திரும்பி இருந்தார்கள். தற்போது இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதால் அவரும் சென்னை திரும்பி விட்டார். அடுத்தகட்டமாக லியோ படப்பிடிப்பில் முக்கிய வில்லன்களாக நடிக்கும் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் காஷ்மீர் செல்வதை தொடர்ந்து மீண்டும் விஜய்யும் காஷ்மீர் செல்கிறார். அப்போது விஜய்யுடன் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் மோதும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.