இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா , பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் என பலர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பி நிலையில், விஜய் மற்றும் திரிஷாவும் ஒரு சிறிய பிரேக்கிற்காக சென்னை திரும்பி இருந்தார்கள். தற்போது இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதால் அவரும் சென்னை திரும்பி விட்டார். அடுத்தகட்டமாக லியோ படப்பிடிப்பில் முக்கிய வில்லன்களாக நடிக்கும் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் காஷ்மீர் செல்வதை தொடர்ந்து மீண்டும் விஜய்யும் காஷ்மீர் செல்கிறார். அப்போது விஜய்யுடன் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் மோதும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.