திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பத்து தல' மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'முப்தி' என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசியதாவது : இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது.
இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90 சதவிகிதம் வேறாக கொடுத்திருக்கிறேன். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது.
நான் எது கேட்டும் ரஹ்மான் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் 'நம்ம சத்தம்' லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மேடையில் பாட உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.