ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய்க்கும், அவரது தந்தையான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெற்றோரை அவர் தவிர்த்ததாக விமர்சனம் எழுந்தது. அதோடு வாரிசு என்ற குடும்ப சென்ட்டிமென்ட் படத்தில் நடித்த விஜய் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த பெற்றோரை சம்பிரதாயமாக மட்டுமே வரவேற்றார் என்றும் இணையதளத்தில் தொடர்ந்து அவருக்கு எதிரான கமெண்ட்டுகள் வலம் வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், பிரமாண்டமாக நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நாங்களும் விருந்தினராகவே கலந்து கொண்டோம். ஆனால் அந்த விழாவில் விஜய் எங்களை வரவேற்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எங்களை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எங்களை அவர் வரவேற்று தனியாக நேரத்தை செலவிடுவதற்கான இடம் அதுவல்ல. அது அவர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா. அவரை காண வேண்டும் என்பதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு வருகிறார்கள். அவ்வளவு ரசிகர்களும் விஜய் மீது செலுத்திய அன்பை நேரில் பார்க்கும்போது, அவரை பெற்றவர்களான எங்களுக்கு சந்தோசமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மற்றபடி விஜய் எங்களை தவிர்த்தார் என்று சொல்வதெல்லாம் தவறு. தேவையில்லாமல் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்கிறார் ஷோபா.