திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
உலகளவில் பல விருதுகளை குவித்து வந்த இந்த படம் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதையும் இந்தபாடல் வென்றது.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்டேட் ஒன்றை ராஜமவுலி கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதைப்பற்றி தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதி முடித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.