பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திர ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. கடந்த சில பதிவுகளாக தங்களது குழந்தையுடன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் அவர் போடும் பதிவுகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
நேற்று இரவு, குழந்தைகளின் கைகளை பாசத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நமது அன்புக்குரியவர்களுடன் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு, அனைத்தையும் பற்றியது…. நீங்கள் வைத்திருக்கக் கூடிய அன்பு….” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு பறி போனது பற்றி விக்னேஷ் சிவன் சிறிதும் கவலைப்படவில்லை. தனது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை அது கொடுத்துள்ளது என்று ஒரு வாரம் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.