தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
அடுத்து இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்து தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய போஸ்டருன், இத்தாலி மொழியில், “சர்வதேச ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவது அத்திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.