இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின் 'ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில்தான் அதிகம் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேஷன் நிகழ்வில் டாப்ஸி அணிந்த ஆடையும், ஆபரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சியான சிகப்பு நிற கவுன் அணிந்து, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் அவர் அணிந்த நெக்லஸ் தான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.
கடவுள் உருவம் பொறித்த நெக்லசை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் அணியலாமா என பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில்தான் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதத்தில் சில செயல்கள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகையே இப்படி செய்வது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது.