திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப்படம் பிரமாண்டமாய் உருவாகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகின.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். இந்த படத்தை சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இப்படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.