ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெயில், மலைக்கோட்டை, குருவி, அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு தானே ஒரு கண்ணீர் அஞ்சலி பேனரை பதிவிட்டுள்ளார் ஜி.எம்.குமார். அதோடு ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்றும் பதிவு போட்டிருக்கிறார்.
ஜி.எம்.குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் காரியமாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் தான் அவர் இறந்தது போன்று ஒரு காட்சி இருக்கும் போல் தெரிகிறது. அதற்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று அவரே போட்டோ எடுத்து இப்படி பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவு வைரலானது.