தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மார்ச், 24ல் வெள்ளியன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். விஜய், பார்த்திபன், ஏஎல் விஜய், முருகதாஸ், மகிழ்திருமேனி, சிம்பு, மிர்ச்சி சிவா, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு இன்று(மார்ச் 27) நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். அஜித் வீட்டிற்கு சூர்யா, கார்த்தி காரில் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது.