இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மார்ச், 24ல் வெள்ளியன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். விஜய், பார்த்திபன், ஏஎல் விஜய், முருகதாஸ், மகிழ்திருமேனி, சிம்பு, மிர்ச்சி சிவா, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு இன்று(மார்ச் 27) நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். அஜித் வீட்டிற்கு சூர்யா, கார்த்தி காரில் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது.