பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரணவாத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்துவேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் இணையதளங்களில் பரவின. இந்நிலையில் இதுபற்றி இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார். 'சந்திரமுகி-2' படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள்.