இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ஆரா, குட்டி இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சாகுந்தலம் படத்தில் ஆராவுடன் நடித்த அனுபவம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛அல்லு அர்ஜுனின் மகள் தனது திறமையால் படப்பிடிப்பில் உள்ள அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். அவர் புத்திகூர்மை மிக்கவர். அதோடு ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் மிகத் தெளிவாக பேசினார். அவருடன் நடித்த அனுபவம் மிக புதுமையாக இருந்தது. பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் என்னுடைய மனதை கொள்ளை அடித்துவிட்டார் ஆரா. இந்த ஆரா சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர். இவர் இந்த சாகுந்தலம் படத்தில் குட்டி இளவரசியாக நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.