இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாட்டுப்புற மற்றும் சினிமா பின்னணி பாடகியான ரமணி அம்மாள்(63) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம் பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். போதிய வாய்ப்பு இல்லாததால் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இவர் 2017ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரலாமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் "ராக்ஸ்டார்" ரமணி அம்மாளாக வலம் வந்த இவர் ‛ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார். மேலும் பல வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடி உள்ளார்.
ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.