துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரகுமான், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்கள், நடிகைகள் என இருந்தும் 'பொன்னியின் செல்வன் 2' டிரைலரை சரியான விதத்தில் இன்னமும் கொண்டு போய் சேர்க்கவில்லை என தமிழ் சினிமா ரசிகர்கள் வருந்துகிறார்கள்.
அந்த டிரைலர் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சேர்த்து யு டியூபில் 25 மில்லியனைக் கடந்தது. தற்போது வரையிலும் தமிழில் 11 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 13 மில்லியன் பார்வைகளையும் மட்டுமே கடந்துள்ளது.
அதே சமயம் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்கான டிரைலரை நேற்று யு டியூபில் வெளியிட்டார்கள். அந்த டிரைலர் 24 மணி நேரத்திலேயே ஐந்து மொழிகளிலும் சேர்த்து 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் 25 மில்லியனைக் கடக்க ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டது.
'புஷ்பா 2' டிரைலர் தெலுங்கில் 17 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 19 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. டிரைலர் வெளியாகி இன்னும் 24 மணி நேரம் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடியும் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
'யாத்திசை' என்ற புதுமுகங்கள் நடித்த ஒரு சரித்திரப் பட டிரைலர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டே நாட்களில் 6 மில்லியனைத் தொட உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது 'பொன்னியின் செல்வன் 2'க்கான வரவேற்பு குறைவாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் 2' படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், படக்குழுவோ டிரைலர் வெளியிட்ட பின் வேறு எதையும் செய்யவில்லை. படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த 20 நாட்களில் மற்ற மொழிகளில் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்பது மணிரத்னத்திற்கு மட்டுமே தெரியும்.