தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன் பிறகு சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட சில படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விசாகா சிங், அது குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், என்னால் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை நோக்கி உடல்நிலை திரும்புகிறது. ஏப்ரல் மாதம் எப்போதுமே எனக்கு புத்தாண்டாகவே இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதாலோ என்னவோ எனது பிறந்த மாதத்தில் முன் மாதம் என்பதால் கோடை நாட்களை நோக்கி ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது, கால மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.