பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'கர்ணன்' படம் நல்ல வரேற்பை பெற்று, வசூலையும் குவித்தது. சிலதினங்களுக்கு முன் மீண்டும் நடிகர் தனுஷூம் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கி உள்ளார் தனுஷ்.
இந்நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகிற படம் என்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை மற்ற மொழிகளில் உள்ள சிறந்த வல்லுநர்களை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறதாம். மாரி செல்வராஜிற்கு அலுவலகம் ஒன்றை அமைத்து கொடுத்து படத்தின் பணிகளை பார்க்கும்படி தனுஷ் கூறியுள்ளாராம்.