ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை : 'நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்' என சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை: ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துதல் மசோதா கடந்த 24ம் தேதி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
முன்னதாக இச்சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு அமல்படுத்தியதில், தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளை காவல்துறையினர் பட்டியிலிட்டு வருகின்றனர்.
இதில் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகத்தில் தடை என்ற போதிலும், பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து, பணம் செலுத்தி விளையாடும் அனைத்து வித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.