ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி அடுத்த வாரம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது கதாபாத்திரப் பெயர்களை மாற்றியிருந்தார்கள். படம் ஓடிய வரை அப்படியேதான் இருந்தது.
அது போலவே இப்போது இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில் நேற்று த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது பெயர்களை நீக்கி கதாபாத்திரப் பெயர்களான குந்தவை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். ஆனால், டுவிட்டர் தளத்தின் புதிய விதிகளின்படி அவர்களது 'ப்ளூ டிக்' நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது த்ரிஷா அவரது கதாபாத்திரப் பெயரான 'குந்தவை' என்பதை கைவிட்டுவிட்டு 'த்ரிஷா' என்பதற்கே மாறியுள்ளார். ஜெயம் ரவி இன்னும் மாற்றாமல் இருக்கிறார்.