இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி அடுத்த வாரம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது கதாபாத்திரப் பெயர்களை மாற்றியிருந்தார்கள். படம் ஓடிய வரை அப்படியேதான் இருந்தது.
அது போலவே இப்போது இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில் நேற்று த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது பெயர்களை நீக்கி கதாபாத்திரப் பெயர்களான குந்தவை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். ஆனால், டுவிட்டர் தளத்தின் புதிய விதிகளின்படி அவர்களது 'ப்ளூ டிக்' நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது த்ரிஷா அவரது கதாபாத்திரப் பெயரான 'குந்தவை' என்பதை கைவிட்டுவிட்டு 'த்ரிஷா' என்பதற்கே மாறியுள்ளார். ஜெயம் ரவி இன்னும் மாற்றாமல் இருக்கிறார்.