ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை ஆரம்பித்து விட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொகாரா என்ற நகரத்தில் அஜித் குமார் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதோடு அங்குள்ள தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி, அஜித் படத்திற்காக கதை திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.