ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவரது மகனான துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இருவருமே சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றனர். அதிலும் துல்கர் பன்மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்முட்டியின் தாயாரான பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று காலமானார். நேற்று மாலையே அவரது இறுதிச்சடங்கும் நடந்தது. மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் உலகம் முழுக்க ரம்ஜான் பண்டிகை இன்று(ஏப்., 21) கோலாகலமாய் கொண்டாடப்படுகிறது. இஸ்லாம் மதத்தை சேர்ந்த மம்முட்டி ரம்ஜானை முன்னிட்டு தனது மகன் துல்கர் உடன் கொச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டுத்தொழுகை நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாய் பங்கேற்றார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின.
மம்முட்டிக்கு கமல் ஆறுதல்
இதனிடையே மறைந்த மம்முட்டியின் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு : "மம்முட்டியின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.