இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவை அனைத்திலுமே யாஷிகாவை பல லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் திடீரென டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய சிஇஓ எலான் மஸ்க் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் மீதான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எவரும் ப்ளூ டிக் பெற முடியும். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருந்தாலுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் நேற்று ஒரேநாளில் அரசியல் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. நடிகை யாஷிகாவின் டுவிட்டர் ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான யாஷிகா, 'நான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க முடியாது. டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஷாருக்கான் என பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.