தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவை அனைத்திலுமே யாஷிகாவை பல லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் திடீரென டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய சிஇஓ எலான் மஸ்க் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் மீதான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எவரும் ப்ளூ டிக் பெற முடியும். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருந்தாலுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் நேற்று ஒரேநாளில் அரசியல் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. நடிகை யாஷிகாவின் டுவிட்டர் ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான யாஷிகா, 'நான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க முடியாது. டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஷாருக்கான் என பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.