ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மும்பை மாடல் அழகியான மிஷா நரங் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் விமல் ஜோடியாக 'துடிக்கும் கரங்கள்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் கன்னட படத்தில் அறிமுகமாகிறார். மஞ்சு ஸ்வராஜ் இயக்கும் படத்தில் அஜய்ராவ் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இதுகுறித்து மிஷா நரங் கூறியதாவது: கேஜிஎப், காந்தாரா படங்கள் மூலம் கன்னட சினிமா, உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கும் நேரத்தில் நான் கன்னடத்தில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை, கலாச்சாரத்தை கற்றுக் கொள்ள நினைப்பேன். தெலுங்கு, தமிழை ஓரளவுக்கு கற்றுக் கொண்டேன். இப்போது கன்னடம் கற்று வருகிறேன். அதோடு நேரம் கிடைக்கும்போது கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து அந்த மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
மைசூரில் படப்பிடிப்பு நடந்தபோது புகழ்பெற்ற சாமுண்டி மலைகள் மற்றும் மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்தேன். சாமுண்டேஸ்வரி கோவிலில் நேர்மறையான அதிர்வுகளை உணர்ந்தேன். அதனால் கன்னட சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. என்கிறார் மிஷா.