கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
குக் வித் கோமாளியின் நான்காவது சீசனுக்கும் முந்தைய சீசனை போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீசனில், மக்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய விஷயமே ஜி.பி.முத்துவின் என்ட்ரி தான். தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், குக் வித் கோமாளியில் என்ட்ரியானது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து, கடந்த சில எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார புரோமோவிலும் ஜி.பி.முத்து இடம்பெறவில்லை. எனவே, அவர் விலகிவிட்டாரா என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள ஜி.பி.முத்து, 'ரெஸ்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதிக்கு மேல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்காரணமாக குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து ரீ-என்ட்ரி கொடுப்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகிவிட்டது.