ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

குக் வித் கோமாளியின் நான்காவது சீசனுக்கும் முந்தைய சீசனை போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீசனில், மக்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய விஷயமே ஜி.பி.முத்துவின் என்ட்ரி தான். தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், குக் வித் கோமாளியில் என்ட்ரியானது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து, கடந்த சில எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார புரோமோவிலும் ஜி.பி.முத்து இடம்பெறவில்லை. எனவே, அவர் விலகிவிட்டாரா என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள ஜி.பி.முத்து, 'ரெஸ்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதிக்கு மேல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்காரணமாக குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து ரீ-என்ட்ரி கொடுப்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகிவிட்டது.