தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; "இனிவரும் காலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத வகையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இங்கு நிறைய திறமையான நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.