சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு இணையாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் மாராட்டிய மாநிலம் புனேயில் அவரது இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு சத்தமாக கூறினார். இதை கண்டு திடுக்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக என்பது போல் அந்த அதிகாரியை பார்க்க... அவர் இரவு 10 மணிவரைதான் இசை நிகழ்ச்சி மணி 10 ஆகிவிட்டது என்றார். தனது கை கடிகாரத்தை பார்த்த ரஹ்மான் புன்னகை செய்தபடியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
“இசை நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை” என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




