ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். இதற்காக ஒற்றை சாளர முறையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே முறையான அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெறலாம். இனிமேல், ராஜாஜி மண்டபம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச்சின்னங்கள், வள்ளுவர் கோட்டம், அரசு மனநலக்காப்பகம், மெரினா கடற்கரை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.