மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி உடன் ‛போலா சங்கர்' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா அவர் கூறியது: "திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷமாக உள்ளது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் கதாநாயகிகளுக்கு அரிதாக தான் நடக்கும். எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ரஜினி உடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11ம் தேதியும் வெளியாக இருக்கிறது." என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.