பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் அப்படி இல்லை என்றாலும் 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் மணிரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய நோட்டீசில், இந்த பாடலை தனது குடும்பத்தினர் 'அதன' ராகத்தில் உருவாக்கி இருந்தார்கள். 1978ம் ஆண்டு இந்த பாடலை ஹாலந்தில் நடந் இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். எங்கள் குடும்பத்தின் அனுமதி பெறாமல் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார். என்று குறிப்பிட்டுள்ளர்.
இதற்கு மணிரத்னம் சார்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், 'வீரா ராஜ வீரா' பாடல் 13-ம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவானது. மேலும், இப்பாடல் 'த்ருபத்' இசைப்பாணியில் இயற்றப்பட்டது. விளம்பர, லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வசிபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.