தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி சினிமா ஆகிறது. தங்கள் கிராமத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் பல ஆண்டுகள் தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாத கிராமத்தை போன்று தங்கள் ஊர் மின்சார கம்பத்தில் ஒரு அபூர்வ வெளிநாட்டு பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முயற்சித்தபோது அந்த பறவை குஞ்சு பொறித்து தன் குஞ்சுகளுடன் அது பறந்து செல்லும் வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல் காத்திருந்த கிராம மக்க்கள் பற்றிய செய்தியும் வந்தது. இந்த செய்தியை 'கூடு' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்நேசத்தை சொல்லும் இந்த படம் காமெடி, செண்டிமென்ட் கலந்த கிராமத்து படமாக தயாராக இருக்கிறது.