இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1990களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் சரிவடைந்ததை அடுத்து பருத்திவீரன் படத்தில், கார்த்தியின் சித்தப்பாவாக க நடித்து கேரக்டர் நடிகராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் சரவணன். இந்நிலையில் நடிகர் சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்திருக்கிறார்.
அதையடுத்து மீடியாக்களை சந்தித்த அவர், தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டில் இருந்து தன்னை சரவணன் வெளியேறச் சொல்வதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு என்னை காதலித்து திருமணம் செய்த சரவணனை பருத்திவீரன் படத்துக்கு முன்பு வரை நான் தான் சம்பாதித்து பார்த்துக் கொண்டேன். இப்போது எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. நான் சம்பாதித்து அவர் பெயரிலேயே வாங்கினேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் சரவணன்தான் காரணம் என்று சூர்யா ஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.