பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமும் ஐஸ்வர்யாராயும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார்கள். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரமும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்தனர். இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமலஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியிருக்கும் மனிரத்னம், இந்த படத்தை இயக்கி முடித்ததும் விக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.