பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மும்பையில் நடைபெறும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் ரஜினி.
அதையடுத்து அவர் சென்னை திரும்பியதும் ஜெயிலர் படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்குகிறார். அந்த வகையில் ஜூன் 1ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் டப்பிங்கை அவர் தொடங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணிகளை முடித்ததும் அடுத்தபடியாக ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார்.