பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவர் கூறுகையில், ‛‛சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு இப்போதுதான் நான் முதல்முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக, தல தோனி கடைசி இரண்டு பால் ஆடினார். அது போதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .