இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுதீப்தோ சென் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இப்படம் வெளியானது. அதோடு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி இப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கும், அந்த பட குழுவுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அப்பட நாயகியான அடா சர்மா ஒரு விபத்தில் சிக்கியதால் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்று விட்டதோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் நன்றாக இருக்கிறேன். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. பெரிய விபத்து எதுவும் இல்லை. அனைவரும் என்மீது கொண்ட அக்கறைக்கு நன்றி. நானும் படக்குழுவும் நன்றாக இருக்கிறோம் என்று பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அடா சர்மா.