இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல கர்நாடக சங்கீத பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. சினிமாவிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பாக வசீகரா, முதல் கனவே, ஒன்றா இரண்டா, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே.... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் பாடி உள்ளார். அதோடு உள்நாடு, வெளிநாடு என பல நாடுகளிலும் தொடர்ந்து அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மெல்ல குணமாகி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்கள் அனைவரது பிரார்த்தனையால் நான் நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வழக்கம்போல் சினிமாவில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.